tamilnadu

img

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்க வாலிபர்கள் கருத்தரங்கு

உளுந்தூர்பேட்டை, அக். 3- தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளான புதன்கிழமை (அக் 2) அன்று ‘மதவெறி மாய்த்து மனித நேயம் காத்திட’ வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு சார்பில் உளுந்தூர் பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்  களும் நின்று செல்ல வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவன பணியிடங்களில் தமி ழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க  வேண்டும், தொழிற் பேட்டை துவக்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திடும் அர சியல் அமைப்புச் சட்டங்களை திருத்தம் என்ற பெயரில் நீர்த்துப்போகச் செய்யக்  கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்  கைகளை உள்ளடக்கி இக்கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக மணிக்கூண்டு திட லில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு சங்கத்தின் மாநிலச் செயலா ளர் எஸ்.பாலா தலைமையில்  மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். ஒன்றியச் செயலாளர் வி.மார்த்தாண்டன் தலைமை தாங்கியும், நகரச் செயலாளர் இ.சதீஷ்குமார் வரவேற்றும் பேசினர். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சிறப்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, செயலாளர் வி.ஏழுமலை, பொரு ளாளர் ஆர்.பூமாலை, நிர்வாகிகள் மு.சிவக் குமார், ஏ.தங்கமணி, ஆர்.வெங்கடேசன், எம்.உத்திரகோட்டி, கே.பாஸ்கர், எஸ்.விஜி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.