விழுப்புரம், ஜூன் 20- விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சுற்றுவட்ட கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரை சிமெண்ட் காரை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது, அங்கு பேருந்துக்காக காத்திருந்த சில பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரி வித்தும் சீரமைக்காமல் உள்ளனர். இதனால், மேற்கூரை மேலும் பலவீனமடைந்து எப்பொழுதும் வேண்டுமானாலும் காரை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலைய மேற்கூரையையும், பழதடைந்த இடங்களையும் சீரமைக்க வேண்டும் என பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.