tamilnadu

விழுப்புரம் மற்றும் வேலூர் முக்கிய செய்தைகள்

கல்வராயன்மலையில் சாராய ஊறல்கள் அழிப்பு
வெள்ளிமலை, ஜூன் 2- விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விநியோகிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமாரருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ரேவதி தலைமையில்  கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல்துறையினர் கல்வராயன் மலைப்பகுதியில் சோதனையிட்டுள்ளனர். இச்சோதனையின்போது எருக்கம்பட்டு கிராமம் பெரியாண்டவர்கோயில் அருகில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்கள் சுமார் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட 10 பேரல்கள் இருந்துள்ளன. இந்த 2000 லிட்டர் புளித்த சாராய ஊறல்கள் வைத்திருந்த அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் தலைமறைவாகி விட்டார்.  பின்பு புளித்த சாராய ஊறல்களை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேற்படி தலைமறைவான அண்ணாமலையின் மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் பிரிவில் வழக்கு பதியப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.  

 வேலூர் மண்டல கல்லூரிக் கல்விஇணை இயக்குநர் நியமனம்
வேலூர், ஜூன் 2-வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வர் க.எழிலன் கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டார். சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ள ஆணையில், வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பதவி வகித்து வந்த மு.வளர்மதி மே 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து வேலூர்மண்டலத்துக்கு உள்பட்ட செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.எழிலன் அப்பதவிக்கு கூடுதல்பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.தமிழ்நாடு அரசுக் கல்லூரி கல்விப்பணியில் முதல் நிலை முதல்வராக 15.6.2018 முதல் பணியாற்றி வரும் க.எழிலன், 31.5.2019 முதல் வேலூர்மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.