tamilnadu

விழுப்புரம் முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவை டிஜிட்டல் மயமாக்க கோரிக்கை

விழுப்புரம்.அக்.31- விழுப்புரம் மாவட்டத்தில் 13 தாலுகா, 22ஒன்றியம், 15 பேரூராட்சி, 2 நகராட்சிகள், 1099 ஊராட்சிகள் என சுமார் 26 லட்சம் மக்களுக்கு மேல் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு சிகிச்சை அளிக்க கிராம அளவில் ஆரம்ப சுகாதார நிலை யங்கள், வட்டார மருத்துவ மனை, தாலுகா மருத்துவ மனை, மாவட்ட மருத்துவ மனை என பல்வேறு பகுதிக ளில் அரசு மருத்துவமனை கள் இயங்கி வருகின்றன,  விழுப்புரம் மாவட்ட த்தில்அதிக புறநோயாளிகள் வரும் மருத்துவமனைகளில் ஒன்றாக செஞ்சி அரசு மருத்துவமனை உள்ளது. செஞ்சி வழியாக புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையும், இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூர், திரு வண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. மேலும் பவுர்ணமியன்று திருவண்ணாமலைக்கு கிரி வலம் செல்லவும், அமா வாசையன்று மேல்மலை யனூர் கோவிலில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ளவும். ஆயிரக்கணக்கானோர் செஞ்சி வழியாக செல்கின்ற னர்.அப்போது  விபத்துக்கள் ஏற்படும் போது உடனடியாக அருகில் உள்ள செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர், உடனடியாக எக்ஸ்ரே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், செஞ்சி அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே பிரிவு 1987ல் நிறுவப்பட்டது.அதில் உள்ள எக்ஸ்ரே மெசின் பழமையானது, இதன் மூலம் எக்ஸ்ரே எடுத்து அதன் பிலீம்களை கழுவி முடிவை தெரிந்து கொண்டு சிகிச்சை தொடங்குவதற்கு காலதாமதம் ஆகிறது, இத னால் இங்கு சிகிச்சை யளிப்பதாஅல்லது மேல்சிகிச்சைக்கு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்புவதா என மருத்து வர்கள் முடிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் இந்த காலதாமதம் காய மடைந்தவர்களின் உயிரிழ ப்புக்கு காரணமாகி விடு கிறது. அதனால் உடனடி யாக விபத்துகளில் சிக்கிய வர்களின் காயத்தின் தன்மை அறிந்து கொள்வதற்கு வசதியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் உடனடி யாக எக்ஸ்ரே பிரிவை டிஜிட்டல் மயமாக்கி  கம்ப்யூ ட்டர் எக்ஸ்ரே மிஷினை பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோன்று டிஜிட்டல் எக்ஸ்ரே மெசின் இல்லாத மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பழைய எக்ஸ்ரே மெசின்களை மாற்றி புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மெசின் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மாவட்ட மக்கள்.

ஸ்கூட்டி வாங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
விழுப்புரம், அக்.31- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள்,  அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில்  இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம். விழுப்புரம் மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ‘அம்மா’ இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 4,175 இரு சக்கர வாகனங்களும், நகாப்புற பகுதிகளில் 743 வாகனங்க ளும் என மொத்தம் 4,918 இரு சக்கர வாகனங்கள் வழங்க ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இதில், தாழ்த்தப்பட்டோருக்கு 21 சதவீதமும், பழங்குடியி னருக்கு ஒரு சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 125 சி.சி.க்கு அதிகமில்லாத இரு சக்கர வாகனம் வாங்குவ தற்கு அந்த வாகனத்தின் 50 சதவீதம் விலை அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.31,250 மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற தனியார், தொழிற்சாலை, கடைகள், கூலி வேலை செய்வதற்கு நீண்ட தொலைவு பயணி த்துச் செல்லும் மகளிர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டின் குடி மகளாகவும், 18 வயதிலி ருந்து 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தேதி யன்று இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தொலைதூரப் பகுதிக ளில், மலைப்பகுதிகளில் வசித்து பணிபுரியும் மகளிர், கணவரால் கைவிடப்பட்ட வர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்த சான்று, வேலை அளித்தவர்கள் அல்லது தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஆதாரச் சான்று, ஆதார்அட்டை, மார்பளவு புகைப்படம், முன்னுரிமைச் சான்று உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய பணிபுரியும் பெண்கள், உரிய ஆவணங்களுடன் சேர்த்து, அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை விண்ணப்பங்களைப் பெற்று, அதே அலுவல கங்களில் விண்ணப்ப ங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அளிக்க லாம். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பி க்காத, தகுதியான புதிய விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பித்து வாகனம் பெற்று பயன டைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிர மணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.