tamilnadu

img

குப்பைகளை தரம் பிரிக்க விழிப்புணர்வு கண்காட்சி

கோவை, நவ. 17- கோவை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் விழிப்புணர்வு கண் காட்சி சுகுணா கல்யாண மண்ட பத்தில் சனி, ஞாயிறன்று நடை பெற்றது.  தூய்மை மற்றும் பசுமைக்கான மாற்றுத் தீர்வுகள் குறித்த இக் கண்காட்சியை நகராட்சி நிர்வா கம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாநக ராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடா வத் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநகராட்சி துணை ஆணை யாளர் ச.பிரசன்னா ராமசாமி வரவேற்றார்.  இக்கண்காட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள், 24 மணி நேர குடிநீர்த்திட்டப்பணிகள், மனிதக்கழிவு அகற்றும் ரோபோ செயல்பாடுகள், மருத்துவக் கழிவு, உணவுக்கழிவு அகற்றும் முறைகள், கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் பிளாஸ் டிக் மாற்று போன்ற 81 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் 2014ல் இருந்து செயல்படுத்தப்படுகிறது. கோயம் புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு மாந கரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் பணியாற்றி வருகிறது. நாள்தோறும் சுமார் 850 டன்னிலிருந்து 1100 டன் வரை திடக்கழிவுகளை வீடுகளி லிருந்தும், வியாபார நிறுவனங் களிலிருந்தும் சேகரித்து, தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து, மக்காத குப் பைகளை மறுசுழற்சி செய்யும் வகையில் அப்புறப்படுத்தப்படு கிறது.  மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 100 கிலோ உற்பத்தி செய்பவர்கள் இக்கழிவுகளை முறையாக தரம் பிரித்து மக்கும் குப்பைகளை அவரவர் இருப் பிடத்திலேயே முறையாக கையாள வேண்டும். உரம் தயாரிப்பது, எரிவாயு உற்பத்தி போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றார். மேலும், தொண்டு நிறுவ னங்களும், தனியார் நிறுவனங்க ளும் மற்றும் தூய்மை தூதுவர்க ளும் இணைந்து இக்கண்காட் சியை ஏற்பாடு செய்ததாக அமைச் சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், ஏ.ஜே.செந் தில் அரசன், மேற்கு மண்டல செயற்பொறியாளர் திட்டம் ரவிச்சந்திரன், மாநகர நல அலு வலர் மரு.சந்தோஷ்குமார், தூய்மை பாரா இயக்க தூது வர்கள் மருத்துவர்.சாந்திபிரியா, ராக் ரவீந்திரன், டிம்பிள்லூலூ, அனைத்து மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.