tamilnadu

img

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது

சென்னை, அக். 25- தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்து வமனைகளில் பணிபுரியும் மருத்து வர்களின் தொடர் வேலை நிறுத்தம்  வெள்ளியன்று(அக்.25) தொடங்கி யது.  நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக் கைகளை தமிழ்நாடு அரசு மருத்து வர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள் ளது. அரசு உறுதி அளித்தபடி கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்து வர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. சென்னையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக அவர்கள் மருத்துவமனை வாயில் முன் கூடியிருந்தனர். அவசர சிகிச்சை  மற்றும் காய்ச்சல் பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிபுரிந்து வரு கிறார்கள். புறநோயாளிகள் பிரிவில்  பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் வேலை நிறுத்தம் நடைபெற்றுவரு கிறது.

காஞ்சிபுரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர். உள் நோயாளி கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிபுரியாததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் மருத்து வமனை வெறிச்சோடி காணப்பட்டது. சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் மருத்துவர்கள் வேலை  நிறுத்தம் தொடங்கியது. வழக்கமாக  காலை பணிக்கு 400 மருத்துவர்கள் வர  வேண்டிய நிலையில் 150 மருத்து வர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்த னர். முக்கியமான சிகிச்சைகளுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தனர். புற நோயாளிகள் பிரிவு களில் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை  அளித்து வருகிறார்கள். மருத்து வர்கள் வேலை நிறுத்தத்தால் புற நோயாளிகள் பிரிவுகளில் கூட்டம் குறைவாக இருந்தது. 

நாமக்கல்லில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.  மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணிபுரியும் 300 க்கும் மேற்  பட்ட மருத்துவர்களில் 200 மருத்து வர்கள் பணிக்கு வராததால், பயிற்சி  மருத்துவர்களைக் கொண்டு புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை யில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. உயிர்காக்கும் அவசர சிகிச்சைப்  பிரிவு, மகப்பேறு மருத்துவப்பிரிவு, மற்றும் டெங்கு காய்ச்சல் பிரிவில்  மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 சதவீதம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை, சிறப்பு காய்ச்சல் பிரிவில் மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரு கின்றனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 40 மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 237 மருத்துவர்களில் 50 சத வீதம் பேர் பணிகளை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் புற நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோ ணத்தில் அரசு மருத்துவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சிகிச் சைக்கு வந்த புறநோயாளிகள் ஏமாற்  றத்துடன் திரும்பிச் சென்றனர். முன்ன தாக கோரிக்கைகளை வலியுறுத்தி புற  நோயாளிகள் பிரிவு முன் மருத்து வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திரு வண்ணாமலை, வேலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்  உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களி லும் இந்த வேலை நிறுத்தம் நடை பெற்றது. இதற்கிடையே பேச்சுவார்த் தைக்கு வருமாறு தமிழக அரசின் சுகா தாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  அழைப்பு விடுத்ததாகவும் இதனை யேற்று 8 பேர் கொண்ட பேச்சு வார்த்தைக் குழு அமைத்ததாகவும் தக வல் வெளியாகின. ஆனால், போராடி  வரும் மருத்துவர்கள் இந்த தக வலை மறுத்தனர்.