விழுப்புரம், அக். 1- நூறு நாள் வேலை வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் ஒன்றியத் தலைவர் மகாலிங்கம் தலைமையில் துவங்கியது. மாவட்ட துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன் பேசுகையில், விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட மூங்கில்பட்டு, உலகலாம்பூண்டி, கொட்டி யாம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி களில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவல கத்திற்கு உட்பட்ட நாலவ்மருதூர், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி வேலை வழங்க மறுக்கின்றனர். மேலும் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுவை வாங்கக் கூட அதிகாரிகள் மறுக்கின்றனர். அரசாணை 52இல் குறிப்பிட்டுள்ளது போல் 4 மணி நேர வேலை, முழுமையான கூலி 224 ரூபாயை வழங்க வேண்டும். வேலை வழங்கவில்லை என்றால் பாதி கூலியை மாற்றுத்திறனாளிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். வேலை கேட்டு விண்ணப் பித்த அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்றார். இதற்கிடையே வட்டார வளர்ச்சி அலுவ லர் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கண்ட மங்கலம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளி லும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதியளித்தனர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் கிளை நிர்வாகிகள் காசிநாதன், பாரதி, கௌரி, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.