அத்திவரதர் விவகாரத்தில் மதஉணர்வை புண்படுத்தியதாக எழுந்த புகாரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜூயருக்குக்கு காவல் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் விழா தற்போது நடந்து முடிந்துள்ளது. அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வைக்கக் கூடாது. கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு பயந்து அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைக்கப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து வந்த அத்திவரதரை தற்போது புதைக்க தேவையில்லை இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கைவிடுக்க உள்ளோம். அதற்கான முயற்சியை தான் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சடகோப ராமானுஜர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மத உணர்வை பாதிக்கும் விதமாக பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது அலி என்பவர் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் சடகோப ராமானுஜர் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.