tamilnadu

img

மண் வளம்-இ-பயிர் மருத்துவ முகாம்

திருக்கோவிலூர், மே 9-விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு - திருக்கோவிலூர் கிளை நூலகம் - ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம். காபி நிறுவனம் ஆகியவை இணைந்து மண் வளம், தண்ணீர் பரிசோதனை மற்றும் பயிர் மருத்துவ முகாம் மணலூர்ப்பேட்டை நூலகத்தில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் கு.அய்யாக் கண்ணு தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், குலதீபமங்கலம் வாசகர் வட்டத் தலைவர் இரா.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். நல்நூலகர் அன்பழகன் வரவேற்றார். ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேம்பாட்டு ஒருங்கிணைப் பாளர் மருத்துவர் தே.ச.கிரிஜா தலைமையிலான பயிர் மருத்துவர் தனுசு அம்மாள் குழுவினர் விவசாய மருத்துவ முகாமையும், புதுக் கோட்டை மண் வள ஆலோசகர் பி.சிலம்பரசன் குழுவினர் மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை முகாமையும் நடத்தினர்.சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 105 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து பாதிப்படைந்த பயிர்கள் மற்றும் மண் மாதிரிகளை மருத்துவர்களிடம் காண் பித்து பிரச்சனையையும் அதன் தீர்வுகளையும் கேட்டறிந்தனர். பயிர் மேலாண்மை பரிந்துரைகளை அவர்களுடைய கைப்பேசிக்கு தமிழ் வழியில் குறுஞ்செய்தியாகவும் பயிர் மருத்துவர்கள் அனுப்பி வைத்தார்கள். இ-பயிர் மருத்துவ முகாமில் கோடைகாலத்தில் வேப்பம் பயன் பற்றி கானொளி காட்சி மூலமும் விளக்கம் அளிக்கப்பட்டது. நூலகப் பணியாளர் மு.சாந்தி நன்றி கூறினார்.