திருவில்லிபுத்தூர், மே 31- திருவில்லிபுத்தூர் அருகே இரவு, அதிகாலை நேரங்களில் திருட்டுத்தன மாக மணல் அள்ளுவதாக சிவகாசி துணை ஆட்சியருக்கு தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கனிம வளம் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஞாயிறு அதிகாலை நான்கு மணியளவில் சோதனை நடத்தினர். அப்போது செண்ப கத்தோப்பு சாலையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டு டிராக்டரை நிறுத்தினர். அந்த டிராக்டர் வழக்கம் போல் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டதாம். பின்னர் சிறிது தூரம் சென்ற டிராக்டர் கழிவுநீர் கால்வாயில் சிக்கிக்கொண்டதாம், அங்கு அதிகாரி கள் செல்வதற்குள் ஓட்டுநர் ஓடிவிட்டார். இது தொடர்பாக சிங்கம்மாள்புர கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூர் திருவண்ணா மலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் இரண்டு சக்கர வாகனங்களில் மூடை மூடையாக மணல் கடத்துவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கனிமவளம் கடத்தல் தடுப்பு குழுவினர் இரவு முதல் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான்கு இருசக்கர வாகனங்க ளில் நான்குபேர் மணல் மூட்டைகளுடன் வந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேரை கனிமவள தடுப்பு குழுவினர் மட க்கிப்பிடித்து மணல் மூடைகள், லோடு வாகனங்களை திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிராம நிர்வாக அதிகாரி சங்கர் கொடு த்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.