tamilnadu

img

உள்ளாட்சிகளில் ஊழல் ஆட்சி விழுப்புரம் மாவட்ட அவலம்

அடுத்தவர் வீட்டு தென்னை மரத்தில் ஏறுகிறவனை பார்த்து “ஏன்டா தென்னை மரத்தில்  ஏறுகிறாய் எனக் கேட்டால்; கன்றுக் குட்டிக்கு புல் புடுங்க என்றானாம். தென்னைமரத்தில் ஏதடா புல் என்றால்; அதனாலதான் கீழே இறங்குகிறேன்” என்றானாம். இப்ப டித்தான் இருக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் செலவழிக்கப்படும் விபரமும். குறிப்பாக கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு ஆளும் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஒதுங்கி விடுகிறது என குற்றம் சாட்டப்படுகிறது. திருநாவலூர் ஒன்றியத்தில் களமருதூர் ஊராட்சி பெரிதாகும்.  இங்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைகள் நடக்காமலேயே பய னாளிகளின் அட்டைகளை வாங்கி வைத்துக்கொண்டு வேலை செய்த தாக கணக்கு கொடுத்து பணம்  எடுக்கப்பட்டுள்ளது. பயனாளி களுக்கு ஒரு சிறு தொகையை கொடுத்துவிட்டு மீதிப் பணம் அதி காரிகளால் கையாடல் செய் யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்  ளது. குறிப்பாக இங்கு வசிக்கும்  சிறுபான்மை முஸ்லிம் மக்கள் கணக்கிலிருந்து பணம் சூறை யாடப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதேபோல சங்கராபுரம் ஒன்றி யத்தில் பெரிய ஊராட்சி மூங்கில்  துறைப்பட்டு. இங்கு விவசாய நிலத்தில் வரப்பு மடிப்பு வேலை மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் 35 விவசாயிகளின் பெயரில் சுமார் 40 லட்சம் ரூபாய் அளவிற்கு உய ரதிகாரிகளின் துணையோடு கையா டல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் தடுப்  பணைகள் கட்டப்பட்டு உள்ளதாக வும், இந்திரா குடியிருப்பு வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் கட்டாத வீடுகளை கட்டியதாகக்கூறி முறைகேடு நடைபெற்றுள்ளது. இம்முறைகேடு களின் மீது விசாரணைக்கு உத்தர விடப்பட்டு அந்த ஊராட்சி ஒன்றியப்  பொறியாளர் விஜயன் தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியிடங்களில் திட்ட மதிப்பீட்டை வழிகாட்டு மதிப்பீட்டின்படி குறிப்பிட்டு தக வல் பலகை வைக்கப்பட வேண்டும்  என்பது முக்கியம். இந்த இடத்தில் தான் நூதன கையாடல் என்பது செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு கிலோ மீட்டர் வரப்பு மடிக்க வேண்டுமென்றால் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அதற்கு ஒதுக்கப்  படுகிறது. 

1000க்கு 3000ம்...
வேலை துவங்குவதற்கு முன்பு தகவல் பலகை வைக்க சுமார் 1,000 ரூபாய் போதும். ஆனால் ரூ. 3 ஆயி ரம் ஒதுக்கப்படுகிறது. இப்படி  ஒன்றியம் முழுவதும் ஏராள மான இடங்களில் கையாடல் செய்  யப்பட்டுள்ளது. இதுமட்டு மல்லாமல், 50 விழுக்காடு பணி நடந்  தாலே கூடுதலாக கணக்கு எழுது கிறார்கள். மீதி பணம் கையாடல் செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை உள்ள காலகட்டத்தில் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ள தாக தெரிவிக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன்.

பணக்குட்டையான பண்ணைக்குட்டை...
உளுந்தூர்பேட்டை வட்டம் ஈஸ்வரகண்டநல்லூர் ஊராட்சியில் பல விதத்தில் நூதன ஊழல் நடை பெற்றதாக தெரிவிக்கிறார் சிபிஐ-எம்.எல் கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.வெங்கடேசன். “பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் எஸ்.சாமிக்கண்ணு, எஸ்.மணி, அண்ணாமலை, எம்.அம்மாசி, பா.சாந்தி, பெ.முத்துலட்சுமி, எம்.அரசன் ஆகியோரின் வீடுகள் கட்டி முடிக்காமலேயே பில் பாஸ் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டு விட்டது. இதேபோல தேசிய ஊரக வேலை திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வரப்பு  மடித்தல் போன்ற வேலைகளில்  பல லட்ச ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூரில் வேலை செய்யும் நபர்கள் என இருபது பேர்களின்  பெயர்களில் வேலை நடைபெற்ற தாகச் சொல்லி பணம் எடுக்கப் பட்டுள்ளது. இம் முறைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆனந்தன் ஏற்கனவே, 2 அரசு  வீடுகளை கட்டி அம்முறைகேட்டி னால் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அங்கேயே பணிய மர்த்தப்பட்டுள்ளார். உயரதிகாரி களின் துணையோடு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூறுகிறார் எம்.வெங்கடேசன்.

ஊரான் சொத்து...
முகையூர் ஒன்றியத்தில் 100  நாள் வேலைத் திட்டத்தின் கீழ்  500க்கும் மேற்பட்ட பணித் தளங்க ளில் வேலை எதுவும் செய்யாமல் தகவல் பலகை என கல்வெட்டு மட்டும் வைத்து பல லட்ச ரூபாய்  முறைகேடு செய்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ்.வேல்மாறனும், கண்டாச்சி புரம் வட்டச் செயலாளர் எம்.முத்து வேலும் கூறுகின்றனர். மூங்கில்துறைப்பட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மேற்படி விஜயன்தான் முன்பு இந்த ஒன்றி யத்திலும் திருவிளையாடலில் ஈடு பட்டுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலையிடம் கேட்ட போது, “மக்களின் அடிப்படை வசதி களை மேம்படுத்த ஊராட்சி களுக்கு ஒதுக்கப்படும் நிதியை உய ரதிகாரிகள் நுட்பமாக சூறையாடு கின்றனர். ‘ஊரான் சொத்தை உப் பில்லாமல் தின்னும்’அதிகாரிகள் துணைகொண்டு கொள்ளை யடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.

சிறு மீனை விழுங்கும் பெரிய மீன்...
விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை மிக சமீபத்தில் இம்மாவட்டத்தின் திட்ட அலுவ லர் இல்லத்திலேயே லஞ்ச ஒழிப்புத்  துறையினர் சோதனை மேற் கொண்டனர்.  கீழ்நிலையில் உள்ள ஊழி யர்கள் தவறு செய்தால் உடனடி நடவடிக்கை பாய்கிறது. ஆனால்  உயர் நிலையில் உள்ள அதிகாரி களோ ஆளுங்கட்சியினரின் துணை  கொண்டு தவறுகளில் ஈடுபட்டல் எவ்வித நடவடிக்கையும் இல்லா மல் தென்னை மரத்தில் ஏறியவனை  போன்று பதிலைக் கூறிவிட்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதே சமூக  நிகழ்வாக உள்ளது என்பது வேத னைக்குரிய விஷயம்.