தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி ஊராட்சியில் வருவாய் துறை சிறப்பு முகாம் வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி தலைமை யில் நடைபெற்றது. சிறப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ், ஊராட்சி தலைவர் குணபா, மன்ற உறுப்பினர் ராஜலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர் கவிதா, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.