விழுப்புரம், டிச.20- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத் திற்குட்பட்ட புதுப்பாளையம், பாக்கம், நல்லான் பெற்றாள்பிள்ளை, மாதம்பூண்டி, தென்பாலை, கருவாச்சி தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். தங்கள் பகுதி கிராமங்களின் விளை நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் மின் கோபுரம் அமைத்துள்ளனர். இத னால் விவசாயிகள் பாதிக்கபட்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு உயர் மின் கோபுரம் அமைக்க உள்ளனர். ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்தினால் ஏற்பட்டுள்ள இழப்பை பெற்றுத் தரவேண்டும், மீண்டும் தங்கள் விவசாய நிலங் களில் உயர் மின் கோபுரம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உயர் மின் கோபுரம் அமைப் பதை ஆட்சியர் தடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் தலை மையில் விவசாய சங்க நிர்வாகிகள் சிவன், நாகராஜன், கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.