விழுப்புரம், செப்.19- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத் திற்குட்பட்ட மாற்றுத்திற னாளிகள் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் உதவித் தொகை வழங்காததை கண் டித்து வட்டாட்சியர் அலுவல கம் முன்பு உதவித் தொகை ஆணை வழங்கும் வரைக் கும் காத்திருப்பது என முடிவு செய்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் போராட்டத்தை துவக்கினர். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த 2018 ல் உதவி தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் கொடுத்த விண்ணப்பித் திற்கு உதவித் தொகை வழங்காமல் தற்போது கொடுக்கும் விண்ணப்பங்க ளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு உதவித் தொகை வழங்கும் போக்கை கண் டித்து பேசினர். உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உதவித் தொகை வழங்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக உதவித் தொகை வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.