விழுப்புரம், ஜூலை 12- விழுப்புரம் மாவட்டம் காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அகரம் சித்தாமூர், வாழப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநிலக் குழு உறுப்பி னர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவ லர் கேசவன் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். இதை யடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிக மாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக நிர்வாகி கள் தெரிவித்தனர்.