tamilnadu

மாணவர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்

 திருவில்லிபுத்தூர், மே 20- திருவில்லிபுத்தூர் நகர் சிஎஸ்ஐ சர்ச் காம்ப வுண்டு ஆரம்பப்பள்ளியில் மாணவர்களின் பெற் றோர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அரிசி, பலசரக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜெய சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் சீனி வாசன் கலந்துகொண்டு மாணவர்களின் பெற் றோர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்வில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைச்செயலாளரும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருமான பாலகிருஷ்ணன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.