விழுப்புரம், டிச.16- குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளை சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் வட்டார ஜமாஅத் தலைவர் முகமதுஅசரப்அலி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.இராமூர்த்தி, திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்எல்ஏ, கொரடாநவாஸ்கனி எம்பி,மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர்கள் அப்துஸ் சமது, எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சிபிஜ மாவட்டச் செயலாளர் ஏவி.சரவணன், விடு தலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் சிந் தனை செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த மசோதா திருத்தத்தை கண்டித்து பேசினர். ஆர்பாட்டத்தில் முஸ்லிம்கள்,மதிமுக, மனித நேய மக்கள் கட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி ஆர்ப் பாட்டம் நடத்தியதாகக் கூறி 320 பேரை கைது செய்தனர்.