திருநாவலூர், பிப்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான எஸ்.ஜோதிராமனின் தாயார் கோதாவரியம்மாள் உடல்நலக்குறை வால் புதனன்று (பிப். 5 ) பா.கிள்ளனூரில் காலமானார். அவரது வயது 88. அன்னாரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் எம்.சின்னப்பா, மற்றும் சங்கத்தின் தலைவர்கள், கட்சியின் மாவட்டத் தலை வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி னர். மறைந்த கோதாவரியம்மாள் மற்றும் கணவர் சீனிவாசன் ஆகியோருக்கு அம்பிகா என்ற மகளும், ஜோதிராமன், ஜெகதீசன் ஆகிய மகன்களும் உள்ளனர். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கோதாவரியம்மாளின் உடல் தானமாக தரப்பட்டது. மேலும் அவரது இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.