விழுப்புரம், ஜூன் 28- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.ஆர்.ஜி (எ) கே.ஆர்.கணேசன் (85) உடல் நலக் குறைவால் வெள்ளியன்று (ஜூன் 26) சென்னையில் காலமானார். இவர் திண்டிவனம் மின்வாரி யத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்னாற்காடு மாவட்ட கிளை நிர்வாகியாகவும், ஓய்வு பெற்றோர் நலச் சங்க நிர்வாகியும், திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆரம்பக்கால வளர்ச்சிக்கு வித்திட்டவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், அவரது குடும்பத்தினருக்கும் ஆறு தல் தெரிவித்து்ள்ளது.