tamilnadu

இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிதி உதவி

 விழுப்புரம், ஜன. 7- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமணஉதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 348 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் இயற்கை மரணமடைந்த 20 மாற்றுத்திற னாளிகளின் குடும்பத்திற்கு ரூ.17 ஆயிரம் வீதம், ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

;