tamilnadu

img

சட்ட விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி, மார்ச் 6- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி சட்டப் பணிகள் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் இலவச சட்ட அறிவு விழிப்புணர்வு முகாம், அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது. சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி அமிர்தவேலு தலைமை வகித்தார். செலக்சன் பள்ளி தாளாளர் கண்ணையன், ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன், ரோட்டரி செயலாளர் வீரையா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். செலக்சன் பள்ளி முதல்வரும், ரோட்டரி சங்க தலைவருமாகிய க.சுரேஷ்குமார் வரவேற்றார். வழக்கறி ஞர்கள் பா.வெங்கடேசன், பழனி யப்பன், அஞ்சலி, பவதாரணி சரன்யா உள்ளிட்டோர் கருத்துரைத்தனர். வட்ட சட்டப் பணிகள் (பொ) செயலாளர் அருண்குமார் மற்றும் தன்னார்வலர் சட்ட பணிகள் குழு சின்னக்கண்ணு, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.