விழுப்புரம், ஆக. 2- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தி.பரங்கனி கிராமத்தில் வசிப்பவர் முனி யாண்டி. இவரது மகள் தனலட்சுமி 12ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 354 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தனலட்சுமி உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சாதிச்சான்றி தழ் கோரியுள்ளார். பழங் குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விழுப் புரம் வருவாய் கோட்டாட்சி யர் கடந்த 24ஆம் தேதி தன லட்சுமியின் வீட்டுக்கு வந்து விசாரணை செய்தார். அப் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் தனலட்சுமிக்கு இருளர் சாதிச்சான்று வழங்கக் கூடாது என தகராறு செய்து, அந்த பெண்ணை சாதியைச் சொல்லி திட்டி கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் குளியனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாடு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் சரவ ணன், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் எம்.தமிழரசன், சிபிஎம் வானூர் வட்டச் செயலாளர் ராஜேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.கே.முருகன், வட்டக்குழு உறுப்பினர் சேகர், பழங் குடியினர் பாதுகாப்பு சங்க தலைவர் ராம.கார்த்திக் ஆகியோர் தனலட்சுமியின் வீட்டிற்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 60 குடும்பத்தின ருக்கும் இருளர் சாதிச் சான்று வழங்க வேண்டும், தனலட்சுமியை சாதியைச் சொல்லி திட்டி தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென் றால் வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.