விழுப்புரம், ஆக. 7- விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் மகேந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர். இதில் முறைகேடு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளது. மேலும் இவ ருடன் இரவு தங்கி இருந்த புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குனராக பணிபுரியும் மாலதியும் விசாரணையில் சிக்கியுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் திட்ட இயக்குனர் மகேந்திரன் குடியிருந்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களில் இவர் முறைகேடு செய்து ஏராளமான சொத்துக்கள் சேர்த் துள்ளதாக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இதனடிப்படையில் புத னன்று காலை 7 மணி அளவில் விழுப்புரத் தில் உள்ள இவரது அரசு குடியிருப்பிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப் பாளர் தேவநாதன் தலைமையிலான காவல் துறையினர் சென்றனர். உட்புறமாக கதவு களை பூட்டி தொடர்ந்து ஆறு மணி நேரத் திற்கு மேல் இச்சோதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. 100 நாள் வேலை திட்டம், சாலை பாலங்கள் போடுவது, அரசு கட்டிடங்கள் கட்டும் பணிகள், பொதுக் கழிப்பறை திட்டம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டப்பணி கள் இத்துறை சார்பில் செயல்படுத்தப்படு கின்றன. இத்திட்டங்களை நிறைவேற்றுவ தற்கு ஒப்பந்ததாரர்கள் மற்றும் கீழ்நிலை யில் உள்ள அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்கி யதாகவும் இவர் மீது தொடர் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் புதனன்று (ஆக.8) காலை ஒரேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள இவரது சொந்த வீடு, சென்னை சேத்துப்பட்டில் உள்ள சொந்த வீடு, திருச்சி மாவட்டம் திருவானைக்காவ லில் உள்ள இவரது மாமனார் வீடு, விழுப்பு ரத்தில் இவர் வசிக்கும் அரசு குடியிருப்பு என அனைத்திலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. இவற்றில் நிலக்கோட்டையில் உள்ள வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகை அவரது மாமனார் வீட்டில் இதேபோல சொத்து ஆவ ணங்கள், விழுப்புரம் குடியிருப்பில் முறை கேடு தொடர்பான பல ஆவணங்கள் சிக்கி யுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் குடி யிருப்பில் புதனன்று காலை சோதனைக்குச் சென்றபோது புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் மாலதி என்பவரும் இவரு டன் குடியிருப்பில் இரவு தங்கி இருந்துள்ளார். இவருக்கும் மகேந்திரனுக்கும் இடையே இருந்த கூடா நட்பின் விளைவாக இவரது மனைவி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் சோதனை நடைபெற்றபோது விழுப்புரம் வட்டம் காணை ஊராட்சி ஒன்றி யத்தில் ஒன்றிய ஆணையராக இருப்பவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவல கத்திலிருந்து 3 பைகளில் முறைகேடு தொடர் பான ஆவணங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்ததும் அம்பலமாகியுள்ளது. இச்சோதனையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறையின் ஊராட்சிகள் இணை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் (ஆடிட்) உள்ளிட்ட பல அதிகாரிகள் இன்று அலுவலகத்திற்கு வரா மல் மாயமாகியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் செயல்பாட்டிற்கு வந்த பண்ணைக் குட்டை வெட்டுதல், வரப்பு மடித்தல் போன்ற பல்வேறு விவசாய மேம்பாடு தொடர்பான திட்டங்களில் வேலை செய்யாமலேயே அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அளிப்ப தற்கு பெருந்தொகை கையூட்டாக பெறப்படு கிறது எனவும், 100 நாள் வேலை திட்டத்தில் இவை கணக்கில் காட்டப்பட்டு பணிகள் செய்யப்படாமலேயே அரசு பணம் சூறை யாடப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட் டங்கள் நடைபெற்று வந்தது குறிப்பிடத் தக்கது.