tamilnadu

img

குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

விழுப்புரம், நவ.4- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட துணை த்தலைவர் வி.ராதாகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நம்புரா ஜன் கலந்து கொண்டு வருங்காலத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதம்தோறும் மாற்றுத்திற னாளிகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிட வசதி மற்றும் தங்கும் வசதி உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை பெற லஞ்சம் முறைகேடுகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,  சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஆர்.சௌந்தர்ரா ஜன், செயலாளராக ஏ.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளராக பி.உமா, துணைத் தலைவர்களாக வி.ராதா கிருஷ்ணன், எம்.சுப்புரா யன், பாவாடைராயன், ஏ.வேணு, எஸ்.மகாலிங்கம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

;