விழுப்புரம். பிப். 13- விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினசரி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் உபகரணங்கள் பற்றாக்குறை காரணங்களால் மகப்பேறு உள்ளிட்ட அறுவைச் சிகிச்சைகள் சில ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதன்காரண மாக, பெரும்பாலான வார்டுகள் பூட்டிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. நாளடைவில் அந்த கட்டடங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்தன. அறுவைச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகளின் வருகை குறைந்து, மருத்துவ மனை செயலிழந்தும், பொலிவிழந்தும் காணப்பட்டது. இந்த மருத்துவமனையின் புதிய தலைமை மருத்துவ அலுவலராக கடந்த ஆண்டு, நவம்பா் மாதம் பொறுப்பேற்ற வி.வி. பிரசாத்தின் தீவிர முயற்சி காரணமாக, மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை அரங்கத்தை நவீன வசதிகளுடன் தயார்படுத்தினார். அங்கு கடந்த 3 மாதங்க ளில் 31 பொது அறுவைச் சிகிச்சைகளை நடை பெற்றுள்ளன. மேலும் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 24 படுக்கை அறைகள் கொண்ட பெண்கள் உள்நோயாளிகள் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. பார்வையாளா்கள் தங்குமிடமும் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது. இங்கு எல்இடி டிவி பொருத்தப்பட்டு மருத்துவ அலுவலா்கள் துறை வாரியான சிகிச்சைகள் குறித்து நோயாளிகளுக்கு எளிதாக புரியும் வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனைக் கூடம், லேபராஸ்கோபி, குடும்ப அறுவைச் சிகிச்சை, பெண்களுக்கு கா்ப்பப்பை அகற்றுதல், பொது அறுவைச் சிகிச்சை, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், நவீன மயமாக்கப்பட்ட படுக்கை அறைகள், தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் குடிநீா், கழிப்பறைகள் அனைத்தும் தரமான முறையில் பராமரிக்கப்பட்டு, புத்தம் புதிதாக காட்சியளிக்கின்றன. இதனால் புறநோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் மொத்தம் 17 மருத்துவா்கள் பணி புரிய வேண்டிய இந்த மருத்துவமனையில் 10 மருத்துவா்களே உள்ளனா். போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.