விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்ட விசாரணைக்கூட்டம் மாநில தகவல் ஆணையர் .முத்துராஜ் தலைமையில் நடைபெற்றது. விசாரணையில் நகராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சம்பந்தமான 62 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.