tamilnadu

img

கால்வாய் உடைப்பை சரிசெய்க சிபிஎம் வலியுறுத்தல்

விழுப்புரம், நவ.6- விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே செவலபுரை தடுப்பணை கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாயின் பக்கவாட்டுச் சுவர் இடிந்ததால் வராக நதி வெள்ள நீர், சங்கராபரணி ஆற்றில் கலந்து வருவது, அப்பகுதி விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய இரு வட்டங்கள் வெளி மாநில ஆற்றுப் பாசனம் இல்லாத பகுதிகள். அதனால் இங்கு உள்ள பாக்கம் மலைக் காடுகளில் துவங்கும் வராக நதி சிறுவாடி வனப்பகுதியில் உள்ள காடு, மலைகளில் பெய்யும் மழையின் வெள்ளமும் சேர்ந்து செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய  பகுதியை வளப்படுத்தி வருகின்றன. வராக நதியின் குறுக்கே,  1915 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி யில், கூடப்பட்டில்  தடுப்பணை கட்டினர். அதிலிருந்து சிங்கவரம், செஞ்சி, நாட்டேரி, மேலச்சேரி மற்றும் குப்பத்து ஏரிகள் இன்றுவரை பயனடைந்து வருகின்றன. மேலும் இதே வராக நதியில், கூடப்பட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவலபுரை கிராமத்தில் கடந்த 1976-ல் மேலும் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து 15 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் அமைத்து, வல்லம் ஒன்றியத்திலுள்ள செல்லப்பிராட்டி, மேல்களவாய், காரியமங்கலம், பெரும்புகை, ஆனத்தூர், ஆனங்கூர் உட்பட 5 பொதுப் பணித்துறை ஏரி மற்றும் 11 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் என 16 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றனர். இதன் மூலம் 2400 ஏக்கர் விவசாய நிலங்கள்பாசன வசதி பெற்று பயன்பெற்றன. அணை கட்டிய முதல் ஆண்டில் இதிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது. அடுத்த ஆண்டே வாய்க்காலின் பல இடங்களில் மண் சரிந்தும், வாய்க்கால் தூர்ந்தும் அந்த வாய்க்கால் செயல் இழந்தது, மீண்டும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு  அந்த வாய்க்காலின், உடைப்பை சரி  செய்து தண்ணீர் கொண்டு சென்றனர். இதுவும் மறு ஆண்டு பயனற்று போனது. இதன் பிறகு 2016 ஆம் ஆண்டு கால்வாயை மேம்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அணையிருந்து 5.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றினர்.  இந்த பணி 2017 ஆம் ஆண்டு முடிந்து  கால்வாயில் தண்ணீர் கொண்டு சென்றனர். பின்னர் மாவட்டத்தில் பருவ மழை  குறைவாக பொழிந்ததால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இந்தநிலையில் கடந்த அக்டோபர் 15,16 ஆம் தேதி இப்பகுதி யில் உள்ள பாக்கம் மலைக்காடுக ளில் பெய்த கன மழையால் செவல புரை அணை நிரம்பியது. இதனால் வல்லம் ஒன்றிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டனர்.  கடந்த மாதம் 1 ஆம் தேதி அணையிலிருந்து அந்த கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் சென்றது. அப்போது அணையில் இருந்து 2 கிலோ மீட்டரில்  அன்னமங்கலம் ஏரி உபரி நீர் வரும் ஓடைக்கு மேல் உள்ள உயர் மட்ட கால்வாயில் 10 மீட்டர் அளவுக்கு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கால்வாயில் இருந்து தண்ணீர் முழுவதும் ஓடை வழியாக சங்கராபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் வல்லம் ஒன்றிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது முழுவதுமாக நின்று விட்டது.  பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரிகள் நிரம்பும் என அப்பகுதி விவசாயிகள் எதிர் பார்த்திருந்து காத்திருந்த நிலையில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கால்வாய் மூலம் வரும் தண்ணீர் முழுவதும் சங்ராபரணி ஆற்றில் கலந்து வருவது அப்பகுதி விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.  வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதால் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தடுப்பு நடவடிக்கை எடுத்து கால்வாய் தண்ணீர்  ஏரிகளுக்கு செல்ல விரை வான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவினர் செய்ய வேண்டும் என்றும் பருவ காலம் முடிந்த பிறகு நிரந்தர மாக உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. மேலும், 2017 ஆம் ஆண்டு கால்வாய் சீரமைத்த போது இந்த மேல் மட்ட கால்வாயில் அப்போதே நீர் கசிவு இருந்ததை அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விட்டனர். இப்போது உடைப்பு வரை சென்று விட்டதாகவும் அதிகாரிகள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.