கொரோனா: சித்தமருத்துவ சிகிச்சைக்கு படுக்கைகளை அதிகரிக்க கோரிக்கை
சென்னை, ஆக. 7- அறிகுறி இல்லாதவர்களுக்கும், அதி கம் நோய்த் தொற்று பாதிக்காதவர்க ளுக்கும்தான் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பதாக கூறுவது தவறானது என்று சித்த மருத்துவர் வீரபாகு தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறது. மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப் பட்டு சிகிச்சையால் குணமடைந்தவர்கள் உட்பட பலர் வெள்ளியன்று (ஆக.7) குண மடைந்தனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்த மருத்துவர் வீரபாகு, கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 100 பேர் அனுமதிக்கப்பட்டதில், உயிரிழப்பு இன்றி 2 ஆயிரத்து 600 பேர் குணம டைந்துள்ளனர். 106 டிகிரி காய்ச்சலொடு அனு மதிக்கப்பட்டவர்கள் தொடங்கி பல்வேறு அறிகுறிகள் மற்றும் குறைபாடுகளோடு அனு மதிக்கப்பட்டவர்கள் உட்பட குணம் அடைந்துள்ளனர் என்றார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அலோபதி மருத்துவமனையில் அனு மதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்ப டும் மருந்தோடு, சித்த மருத்துவ சிகிச்சை யையும் இணைத்து அளித்தால் உயிரிழப்பு களை தடுக்கலாம் எனவும் அவர் தெரி வித்தார். மேலும் அவர் கூறுகையில், சித்த மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை 2 ஆயிர மாக உயர்த்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பட்டா மாற்ற அலைகழிப்பு: மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம், ஆக.7- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் (75). இவர் கடந்த புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவலர்கள் உடனே அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், திருநந்திபுரத்தில் எனது பெயரில் கிரயம் செய்யப்பட்ட எங்களது குடும்ப நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தேன். அந்த வீடு தீப்பிடித்து சேதமடைந்ததால், அருகே உள்ள இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன். இந்நிலையில், காலியாக இருந்த எனது மனையை, ஏற்கெனவே கிராம நிர்வாக அலுவலராக இருந்த மணி என்பவர், போலியாக அவரது தந்தை பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளார். இதையறிந்து, கடந்தாண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த போது, இதுகுறித்து மணி உள்ளிட்டோரிடம் விசாரித்த கோட்டாட்சியர் கடந்த 27.5.19 அன்று எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர உத்தர விட்டர். இதுகுறித்து கூடுதல் ஆட்சியரிடம் மணி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த அவர் 31.1.20 அன்று மீண்டும் எனது பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 17ஆம் தேதி பட்டா மாற்றம் செய்து தருவதாக கோட்டாட்சி யர் உத்தரவு கடிதம் அனுப்பினார். ஆனால் இதுவரை பட்டா மாற்றம் செய்து தராமல் அலைக்கழிக்கின்றனர் என்று கூறினார். இதையடுத்து காவலர்கள் அவரை அழைத்துச் சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கச் செய்ததுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றோருக்கு உதவி
திருவண்ணாமலை, ஆக. 7- ஆரணி அருகே 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பார்வையற்ற மாணவர்களுக்கு செல்போன் வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்டவை களை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியவரம் கிரா மத்தில் உள்ள அமலாராக்கனி பார்வையற்றோர் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் தங்கி பயில்கின்ற னர். இங்கிருந்து இந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 12 பேரும் தேர்ச்சி பெற்றனர். மேலும் இதில் சீனிவாசன் என்ற மாணவன் 496 மதிப்பெண் மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளான். இதனை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அந்த பள்ளிக்கு நேரில் சென்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் போன், வாக்கிங் ஸ்டிக் உள்ளிட்டவைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மனநலம் குன்றியவர்களுக்கு மாஸ்க், சானிடைசர், டெட்டால் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 5 முதியோர் பலி
புதுச்சேரி, ஆக. 7- புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஆக.7) புதிதாக 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரியில் 856 பேருக்கு வியாழனன்று (ஆக.6) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 244 பேருக்கு (28.5 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 148 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 81 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 10 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமி லும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 பேர், ஜிப்மரில் ஒருவர் என 5 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.5 சதவிகிதமாக உள்ளது. இதுவரை 4,862 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழந்த வருவாய்த் துறையினருக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்குக
மாவட்ட வருவாய் அலுவலரிடம் வலியுறுத்தல்
கடலூர், ஆக. 7- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் பா.மகேஷ், மாவட்டச் செய லாளர் மு.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் இறந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் சேகரின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 50 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் அரசுக்கு கருத்துரு அனுப்பி யுள்ளார். ஆனால் அரசு 25 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது. எனவே அரசுப் பணியில் 17 ஆண்டுகள் இருந்த சேகரின் குடும்பத்திற்கு தமிழக அரசு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அதேபோல் ஏற்கனவே உயிரிழந்தவர்க ளின் குடும்பத்திற்கும், கொரோனா தடுப்புப் பணி யின் போது விபத்தில் இறந்தவர்களின் குடும்பத் திற்கும் உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் கரு ணைத் தொகையாக 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். தரமான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.