tamilnadu

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கடத்தி விற்க முயற்சி ஊழியர் உட்பட 4 பேர் கைது

விருதுநகர், மே 10- விருதுநகர் மாலைப் பேட்டைத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்த 154 மது பாட்டில்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ஊழியர் உட்பட 4 பேரை போலீ சார் கைது செய்தனர்.  விருதுநகர் மாலைப் பேட்டைத் தெருவில் அரசு மதுபானக் கடை உள்ளது. உயர் நீதி மன்ற உத்தரவையடுத்து மதுபானக் கடை சனிக்கிழமை திறக்கப்படவில்லை. இந்நிலை யில், அக்கடையிலிருந்து, மதுபானங்களை காரில் ஏற்றுவதாக மேற்கு காவல் நிலை யத்திற்கு தகவல் வந்தது.  இதையடுத்து, விரைந்து சென்ற சார்பு ஆய்வாளர்கள் சோமசுந்தரம், கேத்தரின் மேரி ஆகியோர் அங்கு சோதனை மேற்கொண் டனர். அதில், அங்கிருந்த காரில் 154 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலுக்கு முயன்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர் கணேஷ்(47), விற்பனை யாளர் மணிகண்டன்(50), அருப்புக்கோட் டைச் சேர்ந்த சுபாஷ்சந்தர்(28), சூரிய பிர காஷ்(21) ஆகியோரை கைது செய்தனர்.

;