tamilnadu

img

விழுப்புரத்தில் சாதி சான்றிதழ் கேட்டு இருளர் மக்கள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம், ஆக.13 - இருளர் பழங்குடியின மாணவ, மாணவி யருக்கு சாதி சான்றிதழ் கேட்டு வியாழனன்று (ஆக.13) விழுப்புரம் கோட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடி  இன மாணவ மாணவிகளுக்கு சாதி சான்றி தழ் வழங்காமல் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் அலைகழித்து வருகிறார். இதனை  கண்டித்தும், சாதி சான்றிதழ் கேட்டும் 50க்கும்  மேற்பட்டோர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் தலைமையில் கோட்டாட்சியர் அலுவ லகத்திற்கு வந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவலர்கள் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அனை வருக்கும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அலு வலகத்தில் கோட்டாட்சியர் இல்லை. 10 நாட்க ளுக்கு முன்பே தகவல் தெரிவித்தும், கோட்டாட்சி யர் பணியில் இல்லாததால், அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனையடுத்து அலுவலர்கள், மனுக் களை கொடுத்து விட்டு செல்லுமாறு கோரினர். இதனை ஏற்க மறுத்த மக்கள், கோட்டாட்சியர் தனித்தனியாக நேரில் வந்தால்தான் சாதி சான்றிதழ் கொடுப்பதாக கூறினார். எனவே, அவரிடம்தான் மனுவை கொடுப்போம். அவர் வரும்வரை காத்திருப்பதாக கூறி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

காலை 11 மணி  அளவில் தொடங்கி போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவில்லை. இந்தப் போராட்டத்திற்கு முன்னணியின் மாவட்டத் தலைவர் எஸ். முத்துக்குமரன் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில் பேசிய மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச்  செயலாளர் இரா.சரவணன், இருளர் பழங்குடி யினர் சாதிக்கான அடையாளமாக 15 ஆவணங்  களை கொடுத்தும் சான்றிதழ் வழங்கபட வில்லை. இருளர் மாணவியை தாக்கிய ஆதிக்க  சாதியினரையும் கைது செய்யாமல் உள்ளனர் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் என். சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஜி. ராஜேந்திரன், அறி வழகன், முன்னணியின் வட்டச்செயலாளர் எம் .கே. முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்  தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மலை வாழ் மக்கள் சங்க நிர்வாகி எம். தமிழரசன், பகுத்தறிவாளர் இயக்க ராம .கார்த்திக், பழங்குடி யினர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி இரா.முருகப்பன் உள்ளிட்டோர் பேசினர்.