tamilnadu

img

எரிச்சநத்தம்: பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பலி

விருதுநகர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பகுதியில் ராஜலட்சுமி பயர் ஒர்க்ஸ் என்ற என்ற பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.