tamilnadu

img

துரை.ரவிக்குமார் எழுதிய 5 புத்தகங்கள் வெளியீடு

விழுப்புரம், ஜன. 29- விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பி னர் துரை. ரவிக்குமார் எழுதிய ஐந்து புத்த கங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள கூட்ட ரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், துரை.ரவிக்குமார் எம்.பி. எழுதிய தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர், சனாதன மும் பயங்கரவாதமும், அபராதிகளின் காலம், நீதி எனும் புதியப்பாதை, தன்னி லையும் அதிகாரமும் ஆகிய 5 நூல்களை  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறை தலைவர் ராமசாமி வெளியிட, மயிலம் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் சற்குணம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் ஜெகன்நாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சித்தனைச் செல்வன்ஆகியோர் நூல்கள் குறித்து விளக்க உரையாற்றினர். துரை.ரவிக்குமார் எம்.பி. ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பாரதி சிந்தனை புலம் இராம மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;