tamilnadu

img

எடை மோசடியால் கோடிக்கணக்கில் உர ஊழல் : உயர்மட்ட விசாரணை நடத்துமா தமிழக அரசு?

சென்னை,ஆக.04- விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மூட்டைகளில் எடைமோசடி மூலம்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில்  ஊழல் நடைபெறுவதுதெரியவந்துள்ளது.  அதிமுக அரசு இந்த ஊரடங்கு காலத்திலும் ஊழல் விஷயத்தில்  எந்த விதமான முடக்கமும் ஏற்பட்டுவிடா மல் வாய்ப்புள்ள ஒவ்வொரு விஷ யத்திலும் ஊழல் நடவடிக்கையில் ஈடு பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆட்சியாளர்கள் இதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர். அடுத்து நடைபெறும் தேர்தலில் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காகவும் தோற்றுப் போனால் பரம்பரைகள் சொகுசாக வாழவும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களை திரட்டு வதில் அனைத்துத்துறை சார்ந்த அமைச்சர்களும் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். 

கொரோனா நோய்த்தொற்று அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரப் பணிகளுக்கு, சிகிச்சை யளிக்கப் பணமில்லை! மத்திய அரசும் தர மறுக்கிறது என்ற நிலையில், சாலைகள், அரசு கட்டுமானப் பணி கள் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டும் பணியை முதலமைச்சர் அன்றாடம் மேற்கொண்டு வருகிறார். நோய்த் தொற்றிலிருந்தும், உயிரிழப்புகளி லிருந்தும் மக்களை காப்பது தான் மக்கள் நல அரசின் முன்னுரிமை பணி யாக இருக்க முடியும். ஆனால், இதற்கு நேர்மாறாக, எதில் அதிகம் கொள்ளை யடிக்க முடியுமோ அத்தகைய பணி களை செய்வதில் இந்த அரசு ஆர்வம் காட்டி தீவிரமாக செயல்படுகிறது. 

எடை மோசடி மூலம் கொள்ளை

தமிழ்நாட்டில் பருவமழை பெய்து விவசாயம் முழுமையாக நடை பெற்றால் ஆண்டுக்கு சராசரியாக எட்டு லட்சம் டன் உரம் பயன்படுத்தப் படுகிறது. இதில் ஏறத்தாழ 50 சதவீத உரம் வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை முனையம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கடைகள் மூலமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கப்பலில் வரும் உரம் குடோன் களுக்கு கொண்டு செல்லப்பட்டு மூட்டையாக மாற்றப்படுகிறது. 50 கிலோ கொண்ட பொட்டாஷ் மூட்டை ரூ.890க்கும் 45 கிலோ கொண்ட யூரியா  மூட்டை ரூ.270 முதல் 300க்கும்  தற்போது விற்பனை செய்யப்படு கிறது. இதில் 50 கிலோ கொண்ட மூட்டையில் 47 அல்லது 48 கிலோவும், 45 கிலோ கொண்ட மூட்டையில் 42 அல்லது 43 கிலோ மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மூட்டைக்கு மூன்று கிலோ குறைவு என்றால் எவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றுக்  கொண்டுள் ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பொட்டாஷில் ஒவ்வொரு மூட்டைக்கும் தலா 50 ரூபாயும், யூரியாவில் ஒவ்வொரு மூட்டைக்கும் தலா 20 ரூபாயும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. லட்சக்கணக்கான மூட்டைகளில் இத்தகைய எடையளவு மோசடியில் ஈடுபடுவதன் மூலம் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது.  கொரோனா ஊரடங்கிலும் முடங்கா மல் உழைத்து உற்பத்தியில் ஈடு பட்டிருப்பவர்கள் விவசாயி கள். அவர்களை பாராட்டவில்லை யென்றாலும் வயிற்றில் அடிக்காமலா வது இருக்க வேண்டும். எனவே, இந்த எடைமோசடியில் சம்பந்தப்பட்ட வர்கள் யாரெல்லாம் என்பதை கண்ட றிய வேண்டும். இதன் மூலம் பெறப் படும் கோடிக்கணக்கான ரூபாய்களில் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது என்பதும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். எனவே, உர ஊழல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம்  கூறியுள்ளார். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு எடையளவு குறையாமலும், தட்டுப் பாடின்றியும் உரங்கள் கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய மோசடி கள் நடைபெறாமல் இருக்க தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.