tamilnadu

img

ஏழை, எளிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

கொரோனா முழு அடை.ப்பால் வேலையின்றி தவித்து வரும் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகர், நீராவித்தெரு, பெரியார் பாளையம், பாவாலி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  ஏழை, எளிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமையன்ற அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. விருதுநகரில் தியாகி சந்துரு நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி,  நகர் செயலாளர் எல்.முருகன்,  மாதர் சங்க மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், சிபிஎம் நகர்க்குழு உறுப்பினர் பி.ராஜா, எம்.மாரிமுத்து, மாரிக்கனி   உட்பட பலர் பங்கேற்றனர்.

;