tamilnadu

img

என்.ஐ.ஏ.வை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது

மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 30- தேசியப் புலனாய்வு முகமை ( என்ஐஏ) தமிழ கத்தில் அரசியல் லாபத்தை மனதில் வைத்து தலையிடக் கூடாது என, மத்திய அர சுக்கு அதிமுக அரசு தீவிர அழுத்தம் கொடுக்க வேண் டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். திமுக சார்பில் இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  வருமான வரித்துறை, அமலாக்கத்துறை. சி.பி.ஐ. போன்ற சுதந்திரமாகச் செயல்படவேண்டிய அமைப்புகளை அரசியல் மயமாக்கியதுபோல, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையை, மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசு தனது கட்சி அரசியல் லாபத்திற்காகப்  பயன் படுத்த, திமுக கடும் கண்ட னம் தெரிவித்துக்கொள்கி றது. தமிழகத்தில், தேசியப் புலனாய்வு முகமை, அரசி யலுக்காக பயன்படுத்தப்படு வது தொடர்ந்தால், நாடாளு மன்றத்தில் திமுக உறுப்பி னர்கள் ஜனநாயக வழி களில், கடும் எதிர்ப்பு தெரி விப்பார்கள் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.