tamilnadu

இலங்கையில் தமிழர் பகுதிகளில் திடீரென ராணுவம் குவிப்பு மத்திய அரசு தலையிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,நவ.24- இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- பட்ட காலிலேயே படும் என்பதற்கொப்ப, படமுடி யாது இனி துயரம் பட்ட தெல்லாம் போதும் என்று, துன்ப துயரங்கள் அனை த்தையும் அனுபவித்துச் சோர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர்களை மேலும் அச்சுறுத்தி செயலிழக்கச் செய்திடும் எண்ணத்துடன், எடுத்த எடுப்பிலேயே, ‘இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இனி மேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்’ என்று அறி வித்துள்ளதற்கும்; தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்க ளின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ராஜ பக்சே ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களைக் காயப்படு த்தி அவர்களின் கண்ணிய த்தைக் குறைக்கும் பணி வேகமாக துவங்கி விட்டதும், இந்தியாவின் அப்பாவி மீனவர்களின் மீதான தாக்கு தல் அதிகரித்து இருப்பது மான அநியாயம், உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடி குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து, அதன் எதிர்கால பரிமாணங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஈழத்தமிழர்கள் கண்ணி யத்துடனும் சுயமரியாதை யுடனும், அரசமைப்புச் சட்ட ரீதியிலான உரிமைகளுடன் அமைதியாக வாழ்வதற்கும், அவர்கள் விரும்பும் தீர்வு ஏற்படுவதற்கும், ஆவண செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் தேர்தல் முடிந்தவுடன், தமக்கு வாக்க ளித்தவர்கள் வாக்களிக்காத வர்கள் என வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரிட த்தும் சமமாக நடந்து கொள்வேன் என கோத்தபய அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்திடக் கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடி ஈழத்த மிழர் பிரச்சனையை கோத்த பய ராஜபக்சேவிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, அவரின் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீயை அணைத்து, அவரை நல்வழி நியாய வழிப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடை முறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.