மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, பிப். 6- மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலைத் தடுக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில், “கடந்த மூன்று வருடங்களில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வியைப் பாதியில் நிறுத்திய மாணவர்களின் (இடை நிற்றல்) எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்து விட்டது” என்று, அதி முக ஆட்சியில் பள்ளிக் கல்விக்கு ஏற்பட்டு வரும் பரிதாபகரமான நிலை குறித்து, நாடாளு மன்றத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்க ளின் இடைநிற்றல் சதவீத உயர்வை அப்ப டியே மறைத்து, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை அறிவித்தி ருக்கிறார். பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முதலில் செயல்ப டுத்திட வேண்டும் என்ற மோகத்திலும், வேகத் திலும், 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடர்ந்திருந்தால் எத்தகைய பாதிப்புகளை மாணவர் சமுதாயம் சந்திக்க நேர்ந்திருக்கும்? அது பற்றிய கவலை எல்லாம் பள்ளிக் கல்வி அமைச்சருக்கும் இல்லை; முதல்வருக்கும் இதைப் பற்றி யெல்லாம் ஆலோசிக்க நேரமில்லை. அவர்க ளுக்குக் கவலை எல்லாம், யாருடைய பாதம் பணிந்தாவது, பதவியில் எப்பாடு பட்டேனும் தொடர வேண்டும் என்பது மட்டுமே! ஆகவே 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மாணவர்களின் இடை நிற்றலுக்கு ஏழ்மை, பொருளாதார சூழ்நிலைகள் காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், பள்ளிக் கல்வியை வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? படிப்பை தொடர முடியாமல் பாதியில் விட்டுச் செல்வதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு காரணமா? என்பது போன்றவற்றை ஆய்வு செய்ய மூத்த கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங் கோட்டையனைக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் ஆரம்பக் கல்வியிலோ, இடைநிலைக் கல்வியிலோ, மேல் நிலைக் கல்வியிலோ ஒரு மாணவர் கூட பள்ளிப் படிப் பைப் பாதியில் நிறுத்தும் அபாயகரமான மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் எழாமல் தடுப் பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக் கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.