tamilnadu

img

பச்சை நிறமான மேட்டூர் அணை நீரில் செத்து மிதக்கும் மீன்கள்

மேட்டூர்,டிச.4-  பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை நீரில் மீன்கள் செத்து மிதக்கின்றன. சேலம் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 16 கண் மதகுகள் அருகே பச்சை நிறத்தில் நீர் காணப்படுவதுடன் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந் துள்ளனர். காவிரி நீர்பிடிப்புப் பகுதிக ளில் பெய்த மழையால் மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்கா வது முறையாக நிரம்பியது. அணையின் 16 கண் மதகுகள் அருகே இருக்கும் தண்ணீர் அடர் பச்சை நிறத்தில் காணப் படுகிறது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீரானது மதகுகளின் அருகே தேங்கியிருக்கும் குட்டை களில் சென்று கலக்கிறது. இத னால் அங்கு துர்நாற்றம் வீசுவது டன் ஏராளமான மீன்கள் செத்து  மிதக்கின்றன.  இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் மாசுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.