tamilnadu

img

முப்படைத் தளபதி நியமனம் ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும்: திருமாவளவன்

சென்னை, ஜன.1- எதிர்காலத்தில் பாஜக வின் அரசியல் நோக்கங் களை நிறைவேற்றுவதற்கு  ஏதுவாக, பொதுத்தேர்த லுக்கு தடைவிதித்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வர வாய்ப்புள்ளது என்று திரு மாவளவன் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் முப்ப டைக்குமான தலைமைத் தளபதி முதன் முதலாக நிய மிக்கப்பட்டிருக்கிறார். நாடு  விடுதலை பெற்ற பின்னர் இது வரை இல்லாத ஒரு புதிய  மரபை மோடி அரசு உரு வாக்கியிருக்கிறது.

எழுபதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு படைக்  கும் தனித்தனியே தலை மைத் தளபதிகள் தனித்து இயங்கிய நிலையில், தற்  போது அம்மூன்று தலை மைத் தளபதிகளையும் ஒரு புள்ளியில் பிணைத்து  ஒற்றை நபரின் கட்டுப்பாட் டில் கொண்டு வந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ராணுவத் தலைமை தளபதியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற பிறகு, ராவத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டுமே புதிதாக இப்பதவி உருவாக்கப்பட்டதா? அல்  லது பாஜக அரசின் அரசியல்  நோக்கங்களை நிறைவேற்று வதற்கு எதிர் காலத்தில் முப்ப டைகளின் முழு ஒத்துழைப் பையும் பெறுவதற்கு பிபின்  ராவத்தை மட்டுமே நம்பக மானவர் என்னும் அடிப்படை யில் இப்பதவி அவருக்காக உருவாக்கப்பட்டதா? முப்படைகள் தொடர் பான விவகாரங்களில் குடி யரசுத் தலைவரின் தலை யீட்டை தடுக்கும் நோக்கில்  திட்டமிட்டு உருவாக்கப்பட்ட  ஒரு பதவியாகவே இது விளங்குகிறது.

இந்திய பாதுகாப்புத் துறை வலுவாக இருக்க வேண்டும் என்பதில் யாருக் கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அரசியல்  விவகாரங்களில் தலையிடும் ஒருவருக்காக அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்ன ரும் புதுப்பதவியை உரு வாக்கி, மேலும் மூன்றாண்டு  காலம் அவர் பணியாற்றுவ தற்கான வாய்ப்பை வழங்கியிருப்பது. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே  இருக்குமென்கிற அய் யத்தை எழுப்புகிறது. அரசியலமைப்புச் சட்  டத்தை மாற்றவும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவும் மோடியின் தலைமை யிலான சனாதன அரசு  முயற்சித்து வருவது அனை வரும் அறிந்த ஒன்றேயாகும். அத்தகையதொரு சூழலில் இங்கே ராணுவ ஆட்சிக்கான தேவை எழலாம். அதற்கு முப்படைகளின் முழு ஒத்து ழைப்பும் தேவை. அதற்கு நம்பகமான ஒரு தலைமைத் தளபதியின் கட்டுப்பாட்டில் முப்படைகளும் இயங்க  வேண்டியது தேவையா கும். இத்தகைய ஊகங்க ளுக்கெல்லாம் மோடி அர சின் இந்த முடிவு இடமளிக்கி றது. பாஜகவின் ஆட்சியில் இங்கே எதுவும் நடக்கலாம். அதனை எதிர்கொள்ளும் துணிச்சல் மட்டுமே தற்போது நமக்கான தேவை யாக உள்ளது. இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

;