தமிழக அரசின் ஆணைக்கு வரவேற்பு
சென்னை,செப். 28- ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 84-ன்படி மாற்றுத்திறனாளிகளின் உரிமை கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்புகள் வழங்கிட மாவட்டங்களில் சிறப்பு நீதி மன்றங்களை சம்பந்தப்பட்ட அர சாங்கங்கள் உருவாக்கிட வேண்டும் என்ற விதியின்படி சிறப்பு நீதிமன்றங்களை உரு வாக்குவதற்கான அறிவிக்கை வெளியிட்டு, தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடந்த மே மாதம் 21 ஆம் தேதியிட்ட அரசாணை 246-ஐ வெளியிட்டிருந்தார். இந்த அரசாணையை அமல் படுத்துவது குறித்து, 28.08.2019 தேதியிட்ட கடிதத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பி யுள்ளார். மாவட்டங்களில் மனித உரிமை வழக்குகளை கவனிக்கும் அரசு வழக்கறிஞர்கள், மாற் றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளையும் கூடுத லாக கவனிக்கச் செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
தமிழக உள்துறை அமைச்ச கம் வெளியிட்டுள்ள அரசாணை யின் தொடர்ச்சியாக மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அரசு செய லாளர் விஜயராஜ்குமார், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு 13.09.2019 தேதியிட்ட கடிதம் எழுதியுள்ளார். அவருடைய கடி தத்தின் அடிப்படையில் அர சாணையில் உள்ள உத்தரவு களை அமலாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு மாற்றுத்திற னாளிகள் நல ஆணையர் 21.09.2019 தேதியிட்ட கடிதத்தை மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பி யுள்ளார். சட்டம் அமலுக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது சிறப்பு நீதி மன்றங்கள் தமிழ்நாட்டில் செயல்பட உள்ளதை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வர வேற்பதாக சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ்.நம்பு ராஜன் ஆகியோர் ஒரு அறிக்கை யில் தெரிவித்துள்ளனர். இது குறித்து எமது சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தற்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதுகிறோம். சட்ட விதிகள் குறித்து காவல்துறை யினர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளித்திட தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வும் அவர்கள் கேட்டுக்கொண் டுள்ளனர்.