tamilnadu

img

கோடநாடு எஸ்டேட்டிற்கு நானே உரிமையாளர் வருமான வரித்துறையிடம் சசிகலா விளக்கம்

சென்னை,டிச.25- கோடநாடு எஸ்டேட் உள்பட ஜெய லலிதாவின் அனைத்து சொத்துக் களுக்கும் நானே உரிமையாளர் என்று  வருமான வரித்துறையிடம்  சசிகலா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4  ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள சசிகலா 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பின்னர் ஒரு மாதம் கடந்து, வருமானவரி  சோதனைகள்  நடத்தப்பட்டன. அப்போது ரூ1,900  கோடிக்கும் அதிகமான பணமாக்குத லுக்கான குறிப்புகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு  வருமான வரித்துறை  2017 அக்டோபர் 15 அன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. டிசம்பர் 11 அன்று சசிகலா சார்பில் ஆடிட்டர் தனது பதில் அறிக்கையை தாக்கல் செய்தார். 2016-17, 2017-18 ஆம் நிதியாண்டு களில் சசிகலாவிடம் இருந்த சொத்துக் களின் விவரங்களை அதில் பட்டிய லிட்டிருந்தனர். நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீடு இருப்பதாக சசிகலா குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்த மானதாக கூறப்படும் ஜெயா பார்ம்  ஹவுஸ், ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகிய வற்றில் சசிகலா பங்குதாரர் என்றும்  ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கோட நாடு எஸ்டேட் மற்றும் 4 சொத்துக்களில் 2016 ஏப்ரல் 1 இல் இருந்து ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி வரை பங்குதாரராக இருந்ததாகவும், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பங்குதாரர் நிறுவனம் கலைக்கப்பட்டு அதன் உரிமையாளராக சசிகலா இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சசிகலா வுக்கு சொந்தமானது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்தோ தோகா கெமிக்கல், பார்மசூட்டிக்கல் லிமிடெட், ஆஞ்சநேயா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் சசிகலா டைரக்டராக இருப்பதாகவும்  ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் 41 லட்சத்து 66 ஆயிரம் பங்குகளையும், ஆரே  லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் பங்குகளையும், மேவிஸ் சாட்காம் நிறுவனத்தில் 7 லட்சத்து 2 ஆயிரம் பங்குகளையும், ராம்ராஜ் அக்ரோமில்ஸ் நிறுவனத்தில் 36 ஆயிரம் பங்குகளையும்  சசிகலா வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் ரிசார்ட், ஷாப்பிங் மால், ஆலைகள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியதை வருமானத் துறையிடம் சசிகலா முழுமையாக மறுத்துள்ளார்.

 

;