tamilnadu

img

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிடுக!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே: 

சென்னை, மே 30-  விவசாயிகளுக்கான இலவச மின்சா ரத்தை ரத்து செய்யக்கூடாது என்றும் மாநி லங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மின்சாரத் துறையில் தனி யார்மயமாக்கலை எவ்வளவு விரைவாக செயல்படுத்திட முடியுமோ அவ்வளவு விரைவாக செய்திட வேண்டும் என்ற உள் நோக்கத்தோடு முனைப்பு காட்டி செயல் பட்டு வருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டு நாடே பரி தவித்துக் கொண்டிருக்கிற இந்த அசாதா ரணச் சூழலில் மின்சார வாரிய ஊழியர்கள் வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் இரண் டாம் கட்ட வீரர்களாக பணியாற்றி வரும் சூழ லில்,  தனியார் முதலாளிகளை ஊக்குவிக்க வும்  மாநில மின் வாரியங்களை விற்பனை செய்யவும் மத்திய அரசு முயற்சித்து வரு கிறது. இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா- 2020 அமலானால் மாநில அரசு களின் உரிமை பறிபோகும். மின்சாரம் சந்தைப் பொருளாக மாறும். வசதி உள்ள வனுக்கே மின்சாரம் என்ற நிலை உரு வாகும். ஏழைகளுக்கு மின்சாரம் எட்டாக் கனியாக மாறும். 

தொழில்கள் கடும் பாதிப்படையும்

மாநில அரசுகள் அளிக்கும் மானியங் கள் அனைத்தும் ரத்தாகும் சூழல் ஏற்பட்டு, விவசாயம், நெசவு  உள்ளிட்ட தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கும். இலவச மின்சா ரம் ரத்தாகக் கூடிய சூழல் உருவாகும். இதனால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரங்களுக்கு உள்ளாவார்கள். விவசாயி களுக்கு அவர்கள் செலுத்தும் மின் கட்ட ணத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தாலும், எரி வாயு சிலிண்டருக்கு வங்கிக் கணக்கில் செலுத்தியது சில மாதங்களில் ரத்தானது போல் இதுவும் ரத்தாகும். சுதந்திர இந்தியாவின் முதல் மின்துறை அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்,  மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் கடைக் கோடி சாதாரண ஏழைக்கும் மின்சாரம் கிடைக்கும்.மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறி மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மின்துறை இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்.

அம்பானி,அதானியை வாழவைக்க...

ஆனால், மத்திய மோடி அரசு அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளை வாழ வைப்பதற்காக கேந்திரமான சேவைத் துறை யான மின்துறையை தனியார் முதலாளி களுக்கு திறந்துவிட்டு ஏழைகளுக்கு வேட்டு வைக்க மின்சார  சட்டத் திருத்த மசோதாவை அமலாக்கத் துடிக்கிறது. இந்த புதிய மின்சார திருத்தச் சட்டத்தில் புதுப்பிக்கத்தக்க தேசிய எரிசக்தி கொள்கை யை மத்திய அரசே வகுக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது மாநில அரசுகளின் உரிமை யை அப்பட்டமாக பறிக்கும் செயல் மட்டு மல்லாமல் அரசியல் அமைப்புச் சட்டத்திற் கும் எதிரானதாகும். இச்சட்டத் திருத்தம் மாநி லங்களின் வளர்ச்சியைக் கடுமையாக பாதிக் கும். தொழில்கள் மற்றும் விவசாயம் நலிந்து வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்படும்.

மின்சாரச் சட்டம் 2003 இன் படி அமைக்கப் பட்ட மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணை யங்கள் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டிற்குள் வரும். மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பி னர்களை மத்திய ஒழுங்குமுறை ஆணையமே தேர்வு செய்யும். மின் கட்டண நிர்ணயம் செய்யும் உரிமை யை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். இத னால், மாநில மக்களின் தேவையை மாநில அரசுகள் நிறைவேற்ற முடியாத சூழல் உரு வாகும். மின் விநியோகத்தில் தனியாரை ஈடு படுத்துவது நாட்டிற்கு அழிவை உண்டாக் கும். 

மீண்டும் அரிக்கேன் விளக்குகள் காலமா?

அதைப்போன்று தனியார் பெருமுதலாளி கள் மின் வினியோகத்தில் நகர்ப்புறத்தை மட்டுமே தேர்வு செய்வார்கள். கிராமங்களை தேர்வு செய்ய மாட்டார்கள். இதனால் கிரா மங்களில் மீண்டும் அரிக்கேன் விளக்கு களுக்கு திரும்புகின்ற அபாயம் ஏற்படும். கொரோனா தொற்றின் காரணமாக நாட்டு மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாடுவது, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல இயலாமல் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வது, தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர் வது என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியி ருக்கிற மக்களிடம் இதை வாய்ப்பாக பயன் படுத்தி எரியும் கொள்ளியில் எண் ணெய் ஊற்றுகிற வகையில் இந்த மின்சார சட்டத் திருத் தத்தை கொண்டு வருவதற்கு மத்திய பாஜக அரசு துடிக்கிறது.

முதலாளிகளின் நலனுக்கான நிதி ஒதுக்கீடு

20 லட்சம் கோடி ரூபாய் குறித்து ஐந்து நாட்களாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், மின்சார வாரியங்களுக்கு 90,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகக் கூறினார். இந்த பணத்தை மின் வாரியங்கள் தனியாரிடமி ருந்து பெற்ற மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர வேறு எதற்கும் செலவிடக் கூடாது என்றும் தெரிவித்தார். புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்காகவோ அல்லது மின் திட்டங்களின் கட்டுமானப் பணி களுக்காகவோ அல்லது ஊழியர்களின் நலன் களுக்காகவோ நிதி ஒதுக்காமல், மின்சார வாரியங்கள் எவ்வளவு நட்டத்தில் இயங்கினா லும் பரவாயில்லை, தனியார் முதலாளிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்கிற ஒரே நோக்கத்தில்தான் அந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேற்று  மின்துறை அமைச்சகத்தின் நட வடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத் திய பிரதமர் மோடி, டிஸ்காம் நிறுவனங்கள் தங்களது செயல்திறன் அளவுகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடு வதை  மின்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகத்தான் உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் மோடி அரசு யாருக்கான அரசு என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிச்சத்திற்கு வருகிறது.

இந்த மின்சார சட்டத் திருத்தத்தை நிறை வேற்ற வேண்டாம் என தமிழக அரசும் வலி யுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, மத்திய அரசு எக்காரணம் கொண் டும் மக்களைப் பாதிக்கும் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா- 2020ஐ நிறைவேற்றக் கூடாது எனவும் அதை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், எந்தச் சூழ்நிலை யிலும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது எனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 



 

;