மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
திருவள்ளூர், ஆக. 22- ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் கொடுத்த புகார் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கா மல் இருப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் கேள்வி எழுப்பியுள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சியி தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் பல போராட்டங்களுக்குப் பிறகு ஆக.20 அன்று தேசிய கொடியை ஏற்றினார். இதனையடுத்து வெள்ளியன்று (ஆக.21) அவரது இல்லத்திற்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அமிர்தத்திற்கு கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதன்பின் தீக்கதிர் செய்தியாளர்க ளிடம் எஸ். கோபால் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் அமிர்தம் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 8 மாதங்க ளாக குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற விடாமல் அவ மதிக்கப்பட்டுள்ளார். ஊராட்சி அலுவ லக பெயர் பலகையில் தலைவரின் பெயர் எழுதவில்லை. ஊராட்சி மன்ற அலு வலக சாவி, பீரோ சாவி, வரவு-செலவு கணக்குகளையும் ஒப்படைக்கவில்லை. எவ்வித நிர்வாக பணிகளையும் செய்யவிடாமல் ஊராட்சி மன்ற செயலர் சசிக்குமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கவுரியின் கணவர் அரிதாஸ் (திமுக), ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ரேவதியின் கணவர் விஜய குமார் ஆகிய மூவரும் சேர்ந்து தடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் துணையோடு ஊராட்சி மன்ற தலை வர் அமிர்தம் ஆக.18 அன்று பொன்னேரி கோட்டாட்சியர், வட்டாச்சியர், கும்மி டிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் நேரடியாக புகார் அளித்தார். எனினும் அதன்மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவரவே ஆக.20 அன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் முன்னிலையில் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார்.
அதே நேரத்தில், ஊராட்சி தலைவர் அமிர்தம் தலித் என்பதால் 8 மாதமாக செயல்படவிடாமல் தடுத்து வந்த சாதி ஆதிக்க சக்திகளான ஊராட்சி செயலாளர் சசிகுமார், அரிதாஸ், விஜயகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிக்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும், உள்ளாட்சி பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் நிர்வா கத்தில் தலையிடுவதை தடுக்க வேண்டும்.
பாதுகாப்பு வழங்குக
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமிர்தம் தேசிய கொடி ஏற்றினாலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அவ ரால் சகஜமாக சென்று வர முடியாத அசா தாரணமான சூழல் நிலவுகிறது. பத்திரி கையாளர்களும் சுந்திரமாக சென்று செய்தி சேகரிக்க முடியவில்லை. தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே அமிர்தம் இன்றளவும் உள்ளார். எனவே, ஊராட்சி மன்ற தலை வருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அமிர்தம் அளித்த புகாரின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் வி.ஆர்.லட்சுமணன், சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ரவிக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வட்டத் தலைவர் ஜோசப், செயலாளர் சிவக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.