tamilnadu

img

ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திடுக!

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, நவ. 18- ஈழத் தமிழர்களின் நலனையும் உரி மைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் திங்களன்று (நவ.18) விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிக மான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள்  உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சி யும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்  கள். கோத்தபய ராஜபக்சவின் வெற் றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாகக் கடந்து போகவும் முடியாது. அவருடைய பழைய வரலாறு, ஈழத் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதி ரானது என்பதையும், அதனால் ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும், இன்னும் தீர்வு காணப்படாமல் இருக் கும் பிரச்சனைகளையும், ஐநா மனித உரிமைகள் ஆணையமும், உலக நாடு களும் நன்கு அறியும்.

முன்னர் கொண்டிருந்த பகை -  ஆதிக்க மேலாண்மை உணர்ச்சியி லிருந்து அவர் விடுபட்டு; தமிழ் மக்கள், அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடி மக்களே என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மனசாட்சியுடனும், மனித நேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும்; அது  ஒன்றே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பொருள் பொதிந்த புதிய பாதையாக அமைந்திடும் என்றும்  உலக சமுதாயம் எதிர்பார்க்கிறது.  தி.மு. கழகமும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கி றது. கோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடியும், மத்திய பா.ஜ.க. அரசும்,  ஈழத் தமிழர்களின் நலனையும் உரி மைகளையும் பாதுகாத்திட தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பது உலகத் தமிழர்க ளின் ஒருமித்த எதிர்பார்ப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

;