tamilnadu

img

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 2.01 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன.11- பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமையன்று மாலை 5 மணி வரை அரசு பேருந்துகளில் 2.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்கு வரத்துத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன் னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், வெளியூர் செல்வோ ருக்கு வசதியாக, சென்னையில் 30 முன் பதிவு மையங்கள்  திறக்கப்பட்டுள் ளன. பொங்கலையொட்டி, ஜனவரி 11 முதல் 14 ஆம் தேதி வரை 24 ஆயி ரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டி கையை முன்னிட்டு   சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்து கள் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 845 பேர் பயணித்துள்ளனர். நள்ளி ரவு 12 மணி வரை வழக்கமாக இயக்கப் படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகள் மற்றும் 354 சிறப்பு பேருந்துகள்  என மொத்தம் 2 ஆயிரத்து 579 பேருந்து கள் இயக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமையன்று மாலை 5 மணி வரை 3,779 அரசு பேருந்துகளில் 2.01 லட்சம் பேர் பயணம் செய்துள்ள தாக போக்குவரத்துறை தெரிவித்துள் ளது.

;