சென்னை, மே 1- 134வது மேதினம் உலக முழுவதும் உழைக்கும் வர்க்கத்தால் சபதம் ஏற்கும் நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் கொடியேற்றப் பட்டது, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் செங்கொடியை ஏற்றினார்.
அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன், கொரோனாவுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் மகத்தான யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக பொதுச் சுகாதாரத்தையும், பொதுக்கல்வியையும் பாழ்படுத்தி கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக கடைப் பிடித்த கொள்கைகளுக்கு, கொரோனாவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவீன தாராளமய பொருளாதார கொள்கைக்கு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட சபதமேற்போம் என்றார்.
இந்நிகழ்வில் போது மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சி.கல்யாணசுந்தரம், அலுவலக பொறுப்பாளர் வில்சன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மேதின செங்கொடியை ஏற்றினார்.