tamilnadu

img

மதுரை: கொரோனா என வதந்தியால் ரயில் முன்பு விழுந்து வாலிபர் தற்கொலை

மதுரை, ஏப்.1- மதுரை வில்லா புரத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா(35). கேரளா வில் கூலித்தொழிலாளி யாக பணிபுரிந்து வந் தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.  ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பிய முஸ்தபா மதுரை பீபீகுளம் அருகேயுள்ள முல்லைநகரில் உள்ள தனது அம்மாவீட்டில் தங்கியுள்ளார். சளி, இருமலால் சோர்வாக இருந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வாலி பருக்கு கொரோனா இருக்கலாம் என சுகா தாரத்துறைக்கும்  தல்லாகுளம் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். 

 சுகாதா ரத்துறையினர்  முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால் இரண்டு மணிநேரத் திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ் வராததால் அந்தப் பகுதி பொதுமக்கள் சரக்குவாகனம் ஒன்றை தயார் செய்து அவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறி வீட்டிற்கு அவ ரையும், அவரது தாயாரையும் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் முஸ்தாபா கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி மக்கள் எடுத்த வீடியோ வைரலாக பரவியது. இதனால் முஸ்தபா மனவேதனை யடைந்தார். இந்த நிலையில் சென்னையிலி ருந்து திருநெல்வேலிக்கு சீனி மூட்டை களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் முன்பு திருமங்கலம் கப்பலூர் அருகே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ரயில்வே காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

;