tamilnadu

img

எதிர்க்கட்சியாகவே செயல்படுகிறேன்: மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை, நவ. 1-  எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க் கட்சியாகவே செயல்படுவேன் என சட்டப்பேரவையில் தெரிவித்தப்படியே தான் நடந்து வருவதாக திமுக தலைவ ரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டா லின் கூறினார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு பேசுகை யில், ஆட்சியில் உள்ள தவறை சுட்டிக்  காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை.  ஆனால் முதல்வர் பழனிசாமி கோபப்படு கிறார் என்றவர், எதிரிகட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவேன் என பேரவையில் சொன்னதின்படியே தான் நடந்து வருகிறேன். மேலும் தமிழகத்தில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாய கம் தோற்கடிக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றி  தொடராது.  வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தயாராவோம் என்றார்.