இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஜம்மு காஷ்மீர் புதிய யூனியன் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட அவர், அந்த யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட முதலாவது நிறைவு நாளில் தமது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். மறுதினமே டெல்லி வந்த அவர், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த சில மணி நேரத்தில் ஜி.சி. முர்முவை தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவிக்கு நியமிக்கும் அறிவிப்பை குடியரசு தலைவர் மாளிகை அறிவித்தது.
இந்தியாவின் 14-ஆவது தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ஆக கிரிஷ் சந்திர முர்மு சனிக்கிழமை பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.