tamilnadu

img

பணிநிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் - கைது

கோவை, நவ. 5– பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.  தமிழகம் முழுவதும் 8500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு போராடி வருகிறது. இதேகோரிக்கையை வலியுறுத்தி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன்தொடர்ச்சியாக செவ்வாயன்று கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

நீலகிரி

இதேபோல், உதகை ஆவின் அருகே உள்ள மாவட்ட மின்வாரிய தலைமை மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய நீலகிரி மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பி.ராமன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.